தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத் துறை புதிய விளக்கம்!

0
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத் துறை புதிய விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத் துறை புதிய விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத் துறை புதிய விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அண்டை நாடான சீனாவில் ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு சுகாதாரத்துறை விளக்கம் தெரிவித்துள்ளதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று காரணமாக கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் பரவ தொடங்கியது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து கொண்டு வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ அமீருக்கு விரைவில் திருமணம்? அவரே கொடுத்த விளக்கம்! ரசிகர்கள் உற்சாகம்!

அத்துடன் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளன. தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் குறைந்து கொண்டு வருகிறது. ஆனால் அண்டை நாடான சீனாவில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸான ஓமைக்ரான் தொற்று வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அதனால் இதனை கட்டுப்படுத்த தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக சாங்சுன், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட 10 நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்து விலகிய ஆலியா மானசா – இவர் தான் அடுத்த சந்தியா!அதிர்ந்து போன ரசிகர்கள்!

அதனால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் தாக்கம் முழுவதுமாக குறைந்துள்ளது. ஆனால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமான முறையில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பும் இல்லை. கொரோனா பரவல் அதிகரிக்கும் சமயத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து தமிழக முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!