தமிழகத்தில் பிப்.17 மாலை 6 மணிமுதல் புதிய கட்டுப்பாடுகள் – தேர்தல் பிரச்சாரம் நிறைவு!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகளின் படி நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல்:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள் 3,843 நகராட்சி உறுப்பினர்கள் 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த ஜனவரி 28ம் தேதி முதல் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த வாரம் இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியானது. வாக்காளர் பட்டியல் வெளியிட்டத்தை அடுத்து தேர்தல் பரப்புரைகள் நடைபெற்று வருகிறது.
ஆதார் கார்டில் உள்ள போட்டோ பிடிக்கவில்லையா? எளிதாக மாற்றுவது எப்படி? வழிமுறைகள் இதோ!
பிப்ரவரி 19ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கும் மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அந்த வகையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும்.
HDFC, PNB வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதங்களில் மாற்றம்!
அதன்படி நாளை (பிப்.17) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் பிரச்சாரம் முடிந்ததும் அந்தப் பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க தொகுதி கண்காணிப்பாளர் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களையும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.