இந்தியாவில் ஜன.11 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் – வெளிநாடுகளில் இருந்து வருவோர் கவனத்திற்கு!

0
இந்தியாவில் ஜன.11 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் - வெளிநாடுகளில் இருந்து வருவோர் கவனத்திற்கு!
இந்தியாவில் ஜன.11 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் - வெளிநாடுகளில் இருந்து வருவோர் கவனத்திற்கு!
இந்தியாவில் ஜன.11 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் – வெளிநாடுகளில் இருந்து வருவோர் கவனத்திற்கு!

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரும் தங்களது வீட்டில் 7 நாட்கள் கண்டிப்பாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் கொரோனா மற்றும் உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 3000க்கும் மேற்பட்டோர்க்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. இதே நேரம் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்புகளும் ஏறுமுகத்தில் சென்று வருகிறது. அதிகரிக்கும் நோய் தொற்று மீண்டும் ஒரு முழு ஊரடங்கிற்கு வித்திடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. அதற்கேற்றாற் போல் வைரஸ் பரவலை இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – நீதிமன்றத்தில் வழக்கு!

மேலும் கட்டாயம் பொது மக்கள் அரசால் வழங்கப்படும் இரண்டுக்கு டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு வருகிறது. தற்போது 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தொற்று பரவல் நிலை அதிகரித்தல் அத்தகைய சூழலை கருத்தில் கொண்டு ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று மாநில அரசுகள் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையின் புதிய கட்டுப்பாடாக ஜனவரி 11ம் தேதி முதல் வெளி நாடுகளில் இருந்து இந்தியா வருவோர் தங்களது வீட்டில் 7 நாட்கள் கண்டிப்பாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சனி, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு – முதல்வர் தீவிர ஆலோசனை!

அதன் பிறகு 8வது நாள் கொரோனா பரிசோதனை செய்து அதில் நெகட்டிவ் என்று வந்த பின் வீட்டுக்குச் சென்று மேலும் 7 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். சோதனை முடிவை மத்திய அரசின் ஏர்-சுவிதா தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சீனா, கானா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, தான்சானியா, ஹாங்காங், இஸ்ரேல் உள்ளிட்ட எச்சரிக்கை பட்டியலில் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தில் ஆர் டி பிசிஆர் பரிசோதனை செய்து அதில் முடிவு வரும் வரை விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறையை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை ஜனவரி 11 முதல் அமலுக்கு வரவுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!