தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – நீதிமன்றத்தில் வழக்கு!

0
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை - நீதிமன்றத்தில் வழக்கு!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை - நீதிமன்றத்தில் வழக்கு!
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நேரடி வகுப்புக்கு தடை:

தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளும் அடுத்த மாதமான நவம்பர் மாதத்திலேயே திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட உருமாறிய ஓமைக்ரான் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி – தடுப்பூசி கட்டாயம், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இந்த ஓமைக்ரான் தொற்றை தொடர்ந்து கொரோனா பெருந்தொற்றும் வேகமெடுத்து பரவி வருகிறது. அதனால் மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் வரும் ஜன.20ம் தேதி வரை விடுமுறை அறிவித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார். ஆனால் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இதுவரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு – இன்று முதல் டிக்கெட்!

இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவலின் தன்மை அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள், இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களின் நலன் கருதி 10 முதல் 122ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து விசாரித்த நீதிமன்றம் ஆன்லைன் மூலம் மட்டும் வகுப்புகள் நடத்துமாறு தொடரப்பட்ட வழக்கை உடனடியாக அவசர வழக்காக எடுக்க முடியாது என்றும், அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முறையாக எடுத்து வருவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!