தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? இன்று வெளியாகும் அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. அதனால் தமிழகத்தில் ஊரடங்கை டிச.31ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளானது இன்றுடன் முடிவடைகிறது.
புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்ட கொரோனா 2வது அலை தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். ஆனாலும் முழுமையாக கொரோனா தொற்று அகலவில்லை என்பதனை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு டிச.31ம் தேதி வரை நீட்டித்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்.
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? ஆலோசனையில் முக்கிய முடிவு! இன்று அறிவிப்பு!
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஒமிக்ரான் தொற்று நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. அவ்வாறு பரவி வரும் ஒமிக்ரான் தொற்றால் கொரோனா 3வது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை பாதிப்புகளின் அடிப்படையில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியது. மத்திய அரசின் வலியுறுத்தலை ஏற்று ஒரு சில மாநிலங்கள் கூடுதல் கட்டுப்பாடுகள், பண்டிகைகள் கொண்டாட தடை மற்றும் இரவுநேர ஊரடங்கினை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று நள்ளிரவு வரை கோவில்கள் திறக்க அனுமதி – அமைச்சர் அறிவிப்பு!
ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. மேலும் நாளுக்கு நாள் தற்போது மீண்டும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் தமிழக மருத்துவக்குழு உள்ளிட்டவைகள் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்துக் கொள்ளுமாறு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே அறிவித்திருந்த ஊரடங்கு நீட்டிப்பு இன்றுடன் முடிவடையும் நிலையில் இன்று கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்படும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.