தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? ஆலோசனையில் முக்கிய முடிவு! இன்று அறிவிப்பு!
தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் தொற்றுக்கு மத்தியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஆலோசனையில் ஈடுபட இருக்கும் நிலையில் பள்ளிகளை செயல்படுத்துவது குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் மூடல்
மாநிலங்கள் தோறும் புதிய பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கும் ஒமிக்ரான் வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த 2 வாரத்திற்கு முன்பாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தொற்று தற்சமயம் 1000ஐ நெருங்கி வந்திருக்கிறது. இந்த பாதிப்புகள் ஒவ்வொரு நாளும் 2 மடங்காக அதிகரித்து வருவதால் அந்தந்த மாநிலங்களில் நிலவும் நோய் தொற்று சூழலை பொறுத்து கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் இன்று நள்ளிரவு வரை கோவில்கள் திறக்க அனுமதி – அமைச்சர் அறிவிப்பு!
இதற்கிடையில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் இந்தியாவில் 3ம் அலையை உருவாக்கக்கூடும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்திலும் தற்போது 50ஐ நெருங்கி வரும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று (டிச.31) முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார். இந்த கூட்டத்தில் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடர்ந்து நடத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட இருக்கிறது.
இப்போது பள்ளிகள் திறப்பு குறித்து கல்வியலாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் கூறுகையில், 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு வேண்டுமானால் பள்ளிகளை மூடலாம் என்றும் 9 லிருந்து 12ம் வரையுள்ள மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை கவனத்தில் கொண்டு பள்ளிகளை தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதே போல WHO தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விட தடுப்பூசிகள் தான் சிறந்த தீர்வு என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – நகைக்கடன் தள்ளுபடி கிடையாது!
அதனால் பள்ளிகளை முழுமையாக மூடுவதற்கு அரசு எவ்வித முடிவுகளையும் எடுக்காது என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழக கல்வித்துறை சார்பில், நேற்று (டிச.31) ஒரு முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அறிக்கைகள் தயார் செய்யப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கைகளை பொறுத்து, பள்ளிகள் செயல்படுவது தொடர்பாக இன்றைய ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.