கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் தலிபான்கள் – ஆப்கான் அணிக்கு புதிய சேர்மன் நியமனம்!
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து ஆப்கன் கிரிக்கெட் அணிக்கு புதிய சேர்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய சேர்மன்:
ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்நாட்டு அரசியலில் பதற்றம் நிலவி உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிய பின் அங்கிருக்கும் பெரும்பாலான மாகாணங்களை தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து அதிபர் அமீரகத்துக்கு தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் இதனால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
8GB ரேம், 50MP கேமராவுடன் Vivo Y33s ஸ்மார்ட்போன் – மலிவு விலையில் இன்று அறிமுகம்!
இதனை தொடர்ந்து இந்த ஆண்டு டி – 20 உலகக்கோப்பை போட்டிகளில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையில், டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கன் அணி கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இலங்கையில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் பங்கேற்க உள்ளனர். மேலும், உள்ளூர் டி20 போட்டிகள் நடத்த உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போது வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஒழித்து விடுவார்கள் என்று பல்வேறு தரப்பினர் கூறி வந்தனர். இந்நிலையில் தற்போது கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சேர்மனாக அஜிஜுல்லா ஃபாசில் என்பவரை நியமித்துள்ளனர் தலிபான்கள். ஆப்கானிஸ்தானில் வரும் கிரிக்கெட் தொடர்களை அவர் மேற்பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தலிபான்கள் ஆப்கானில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்த உள்ளனர் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது.