தமிழக காவலர்களுக்கான புதிய செயலி – ஆணையர் அறிவிப்பு! விரைவில் அறிமுகம்!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் காவலர்களின் பங்கு இன்றியமையாதது. இந்த நிலையில் காவலர்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டம் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.
காவலர்களுக்கு விடுப்பு:
தமிழகத்தில் கடந்த வருடம் நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் நோய் பரவும் என்ற அச்சத்தால் வீட்டை விட்டு வெளியேறாமல் முடங்கினர். மேலும் கடைகள் வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டது. இத்தகைய இக்கட்டான சூழலிலும் மக்களுக்கு சேவை அளிக்க காவலர்கள் இரவு பகல் பாராது தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் ஏராளமான காவலர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மேலும் பணியால் ஓய்வில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
தமிழ்மொழி திறனறி தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கவனத்திற்க்கு – நுழைவுசீட்டு வெளியீடு!
இந்த நிலையில் காவலர்களுக்கும் ஓய்வு தேவை என்பதை உணர்ந்த அரசு காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக்காக்க ஏதுவாக காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சுழற்சி முறையில் விடுமுறை வழங்கியது. இந்த வார விடுமுறையை அந்தந்த காவல் நிலைய பணி சூழலை பொருந்து எடுத்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவலர்களின் உடல்நலனை மென்பொருள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதன் மூலம் காவலர்களின் உடல் நலத்தை திறம்பட கண்காணிக்க இயலும். ரூ.46 லட்சத்தில் இதற்காக செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் இந்த செயலி பயன்பாட்டுக்கு வர உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை காவல் துறையில் மதுப்பழக்கத்துக்கு ஆளானவர்கள், தொடர் விடுப்பில் உள்ளவர்கள் போன்றோரின் நல மேம்பாட்டிற்காக ‘மகிழ்ச்சி’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதனை விரிவுபடுத்தும் வகையில் தற்போது புதிய மொபைல் செயலி கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்