தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று முதல் வகுப்புகள்!
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி தொழில்நுட்பங்கள் குறித்த அறிவையும் வளர்க்கும் நோக்கில் செப்டம்பர் 6 தொடர்ந்து 6 நாட்களுக்கு கணினி பயிற்சி அளிக்க தொடக்கக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
கணினி பயிற்சி :
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து செப்டம்பர் 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் செப்டம்பர் 8 ம் தேதிக்கு பிறகு 1 முதல் 8 பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்துவது பற்றி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே தீவிரமெடுக்கும் கொரோனா – பெற்றோர்கள் அச்சம்!
நடப்பு ஆண்டு 7ஆம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 9ஆம் வகுப்பிற்கு வந்தாலும், 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிட்ஜ் கோர்ஸ் எனப்படும் இணைப்பு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நவீன காலகட்டத்தில் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்கள் கணினி மயமாக்கப்பட உள்ளது. இதனால் ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சியும், தொழில்நுட்பங்கள் குறித்த அறிவும் அளிக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. அனைத்து ஆசிரியர்களும் கணினி அறிவை பெரும் நோக்கில் செப்டம்பர் 6 முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஆப்கனில் இடைக்கால அரசு விரைவில் அறிவிப்பு – தாலிபான்கள் தகவல்!
இந்த பயிற்சிக்காக ஒவ்வொரு மாவட்ட வட்டத்திலும் ஒரு பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் தாங்களாக முன் வந்து இணையதளம் மூலம் தங்கள் பெயர்களை மையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பதிவை தவறவிட்டு விட்டால் வேறு மையங்களில் தான் பயிற்சி பெற ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.