ஆப்கனில் இடைக்கால அரசு விரைவில் அறிவிப்பு – தாலிபான்கள் தகவல்!
ஆப்கனில் தலிபான்கள் கைப்பற்றி, அங்கு ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஆப்கனில் விரைவில் இடைக்கால அரசு நிறுவப்படும் என தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
தலிபான்கள்:
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்நாட்டு அரசியலில் பதற்றம் நிலவி உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிய பின் அங்கிருக்கும் பெரும்பாலான மாகாணங்களை தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து அதிபர் அமீரகத்துக்கு தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் இதனால் பதற்றமான சூழ்நிலை உருவாகியது.
T20 உலகக்கோப்பை அணி அறிவிப்பு எதிரொலி – பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் விலகல்!
ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றி, அங்கு ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியதாவது, ஆப்கனில் போர் முடிவுக்கு வந்துவிட்டது. விரைவில் இடைக்கால அரசு அமையவுள்ளது. சரியான தேதியை என்னால் இப்போது கூற முடியாது. ஆனால், மிக விரைவில் புதிய அரசு அமையும் எனவும் அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி!
தற்போதைய செயல்முறையில் சில தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்ப்பதில் நாங்கள் மும்முரமாக இருக்கிறோம். துறைகளில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்த்த பின் இடைக்கால அரசு அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார். தலிபான் தலைவர்களில் ஒருவரான அனாமுல்லா சமங்கனி, ‘நாங்கள் முற்றிலும் சுதந்திரமான ஆப்கனில் வாழ்கிறோம். புதிய அரசுக்காக காத்திருக்கிறோம் என கூறியுள்ளார். எனவே ஆப்கனில் விரைவில் இடைக்கால அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.