பயனர்கள் கவனத்திற்கு – புதிய ஆதார் கார்டு பெறுவதற்கான எளிய வழிமுறைகள்!!
முக்கிய அடையாள ஆவணமான ஆதார் அட்டைகளை பயனர்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளலாம். இதற்கான எளிய வழிமுறைகள் குறித்து இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஆதார் அட்டைகள்
மத்திய அரசால் வழங்கப்பட்ட அடையாள ஆவணமான ஆதார் அட்டைகள் பலவிதமான சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், அரசு தரும் நிதியுதவிகளை பெறுவது துவக்கி, பள்ளிக்கூட சேர்க்கை வரை இந்த ஆதார் அட்டைகள் அவசியமாகிறது. வழக்கமாக, ஆதார் அட்டைகளை பெறுவதற்கு அதற்குரிய அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் நெடு வரிசையில் காத்திருக்க வேண்டும். ஆனால், இந்த சேவைகள் அனைத்தும் இப்போது ஆன்லைன் மூலம் எளிதாக்கப்பட்டு விட்டது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
தமிழகத்தில் கிராமங்களில் சாலைகளை மேம்படுத்த ரூ. 4000 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் விளக்கம்!
அந்த வகையில், ஒருவர் வீட்டில் இருந்தபடியே மத்திய அரசின் UIDAI இணையதளம் மூலம் புதிய ஆதார் அட்டைகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி, விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டையுடன் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து 1800 180 1947 அல்லது 1947 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். இந்த எண்ணுக்கு கால் செய்தால் IVR பதில் கிடைக்கும். பின்னர் ஆதார் நிர்வாகியிடம் பேசி, உங்கள் பிரச்சனையை தெரிவிக்கலாம். இது தவிர, சாட்போட் ஆதார் மித்ரா மூலமும் ஆதார் மற்றும் PVC ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.