தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதா – விரைவில் குடியரசுத் தலைவர் ஒப்புதல்.. அமைச்சர் தகவல்!
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நீட் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு:
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் மத்திய அரசின் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசு தொடந்து வலியுறுத்தி வருகிறது. இதனை எதிர்த்து மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்தனர்.
Exams Daily Mobile App Download
இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் தமிழகத்தில் நடைபெற கூடாது என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது. ஏற்கனவே தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு பிரதமரிடமும் மத்திய அரசிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தற்போது வரை தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கவில்லை.
6 முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு பள்ளியில் இலவச சானிட்டரி நாப்கின் – உச்ச நீதிமன்றத்தின் நோடீஸ்!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதா குறித்து குறித்து அரசிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டது. அந்த விளக்கங்களுக்கு தமிழக அரசு உரிய பதில் அளித்துள்ளது. அதனால் குடியரசு தலைவர் விரைவில் நீட் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.