6 முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு பள்ளியில் இலவச சானிட்டரி நாப்கின் – உச்ச நீதிமன்றத்தின் நோடீஸ்!
உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்குவது குறித்து பதில் அளிக்க அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இடைநிறுத்தம்:
இந்தியாவில் பெண் குழந்தைகளின் கல்விக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது. பெண் குழந்தைகள் கல்வி இடைநிற்றலை தவிர்க்க அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. மேலும், பெண் குழந்தைகள் பள்ளி கல்வியை இடை நிறுத்துவதற்கான காரணம் குறித்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், நாட்டில் 23 லட்சம் பெண் குழந்தைகள் பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் கிடைக்காத காரணத்தால் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இதனால் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு பெண் குழந்தைகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்குவதற்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
விரைவில் WhatsAppல் வரவுள்ள Contact Card அம்சம்.. சிறப்பம்சங்கள் என்ன – விவரம் உள்ளே!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இலவச சானிட்டரி நாப்கின் வழங்குவது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் நீதிமன்றத்திற்கு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.