சிலிண்டருக்கான மானியம் கிடைக்க வேண்டுமா? இதை மறக்காமல் செய்யுங்கள்!
கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு சிலிண்டருக்கான மானியம் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்து வருகிறது. தற்போது சிலிண்டருக்கான மானியம் பெறுவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சிலிண்டருக்கான மானியம் பெறுவது என்பது குறித்தான முழு விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சிலிண்டருக்கான மானியம்:
உலகம் முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அவ்வப்போது உயர்ந்து கொண்டே இருக்கிறது. பொதுமக்களின் இந்த நிதி சுமையை குறைப்பதற்காக மத்திய அரசு சிலிண்டர் வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கி வந்தது. அதாவது சிலிண்டருக்கான மொத்த தொகையையும் கொடுத்து சிலிண்டர் வாங்கிய பிறகு அந்த சிலிண்டருக்கான மானிய விலை வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். ஆனால் கடந்து 2020 ஆம் ஆண்டில் இருந்தே சிலிண்டருக்கான மானியம் மக்களுக்கு சென்றடையவில்லை. சிலிண்டருக்கான மானியம் முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டதோ என மக்கள் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் சில பேருக்கு மட்டும் மானியத் தொகையை வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டது.
Exams Daily Mobile App Download
சில பேருக்கு மட்டும் மானியம் கிடைக்கிறது என மக்களுக்கிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மானியம் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முற்றுப்புள்ளி வைத்தார். அதாவது சில கட்டுப்பாடுகளுடன் பொது மக்களுக்கு மானியம் வழங்கப்படும் என அறிவித்தார். அதாவது உஜ்வாலா திட்டத்தின்கீழ் இணைந்துள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும் எனவும், ஒரு வருடத்திற்கு 12 சிலிண்டர்களுக்கு மட்டுமே ரூபாய் 200 மானியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் தற்போது வரைக்கும் வெளியாகவில்லை.
சமையல் சிலிண்டருக்கான மானிய தொகையை பெற விரும்புபவர்கள் கண்டிப்பாக சிலிண்டர் கணக்குடன் ஆதார் கார்டு இணைத்திருக்க வேண்டும். மேலும், வங்கி கணக்கிற்கு அந்த மானியத்தொகை வந்தடைய வேண்டும் எனில் வங்கி கணக்கையும் சிலிண்டர் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் கணக்குடன் ஆதாரை இணைக்க பாரத் கேஸ், இண்டேன், ஹெச்.பி. கேஸ் ஆகிய சிலிண்டர் விநியோகஸ்தர்களின் இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.