Tokyo Paralympics வில்வித்தை – வெண்கலம் வென்றார் இந்திய வீரர் ஹர்வீந்தர் சிங்!
டோக்கியோ பாரா ஓலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்வீந்தர் சிங் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதுவரை பாரா ஓலிம்பிக்கில் இந்தியா 13 பதக்கங்கள் பெற்றுள்ளது.
பாரா ஓலிம்பிக்:
நடப்பு ஆண்டு ஆகஸ்ட் 25 ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக்ஸ் போட்டி தொடங்கியது . இதில் 162 நாடுகள் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 வகை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரவீன் குமார் 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தை கைப்பற்றி உள்ளார்.
தாயகம் திரும்பிய தமிழக வீரர் மாரியப்பன் – தலைநகரில் உற்சாக வரவேற்பு!
கிரேட் பிரிட்டனின் ஜொனாதன் ப்ரூம்-எட்வர்ட்ஸை பின்னுக்குத் தள்ளி 2.07 மீட்டர் தாண்டி புதிய ஆசிய சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற ப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட வீராங்கனை அவனி லெகாரா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இவர் 50மீ ரைபிள் பிரிவில் 445.9 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்து தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.
தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேர நிர்ணயம் – அறிவிப்பு வெளியீடு!
இதன் மூலம் இந்தியாவிற்கு தங்கம் வென்ற முதல் பெண்மணி அவனி லெகாரா ஆவார். இவர்களை தொடர்ந்து இந்திய வீரர் ஹர்வீந்தர் சிங் பாரா ஓலிம்பிக் வில்வித்தை போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதனால் இன்று ஒரே நாளில் இந்தியா பாரா ஒலிம்பிக்கில் 3 பதக்கங்களை பெற்று 2 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலத்துடன் 13 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில், இந்தியா 37 வது இடத்தில் உள்ளது.