தாயகம் திரும்பிய தமிழக வீரர் மாரியப்பன் – தலைநகரில் உற்சாக வரவேற்பு!
பாரா ஒலிம்பிக் இல் வெள்ளி வென்றதை தொடர்ந்து தாயகம் திரும்பியுள்ளனர் மாரியப்பன். செய்தியாளர்களை சந்தித்த அவர் குரூப் 1 பிரிவில் அரசு பணி வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்க போவதாக கூறியுள்ளார்.
பாரா ஒலிம்பிக்:
கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கிய இந்த பாரா ஒலிம்பிக் தொடர், வரும் செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு பாரா ஒலிம்பிக்கில் உலகில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்திய சார்பில் பங்கேற்கும் வீரர் மற்றும் வீராங்கனைகள் 9 வகை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். பாரா ஒலிம்பிக் வரலாற்றில், இந்திய அணியில் இவ்வளவு அதிக வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளது இதுவே முதல் முறை.
தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேர நிர்ணயம் – அறிவிப்பு வெளியீடு!
சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டி பகுதியை சேர்ந்த மாரியப்பன் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் பங்கேற்றார். 2016-ம் ஆண்டு நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றதை தொடர்ந்து இந்த ஆண்டு உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார். அவரது வெற்றியை கிராம மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அவரை ஊக்கப்படுத்தும் வகையில் அவர் குடும்பத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
செப்.6 ஆம் தேதி அன்று ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தற்போது தாயகம் திரும்பிய மாரியப்பன் தங்கவேலுவிற்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமக்கு குரூப் 1 பிரிவில் அரசு பணி வழங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக கூறினார். மற்ற வீரர்களுக்கு அரசு வேலை வழங்கியதை தொடர்ந்து தமக்கும் வேண்டும் என கோரிக்கை வைத்ததாக அவர் கூறினார். தங்கத்தை இலக்காக வைத்து சென்றதாகவும் மழையின் காரணமாக வெள்ளி மட்டுமே பெற முடிந்தது என்று கூறினார்.