மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் DA உயர்வு – நவோதயா வித்யாலயா!
மத்திய அரசு ஊழியர்களுக்கு நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அகவிலைப்படி உயர்வு இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மத்திய அரசு பணியான நவோதயா வித்யாலயாவில் வேலை செய்பவர்களுக்கு DA உயர்வு அளிக்கப்பட உள்ளது.
DA உயர்வு:
மத்திய அரசு துறையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு அரசு சார்பில் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி அரசு ஊழியர்களுக்கென அகவிலைப்படி (DA) தொகையானது ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படுகிறது. இது தவிர அவர்களுக்கு மருத்துவ கொடுப்பனவும் மத்திய அரசால் கொடுக்கப்படுகிறது.
ஜூன் 20 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு உத்தரவு!
அந்த வகையில் மத்திய அரசின் நவோதயா வித்யாலயாவில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கும் இனி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர அவர்களுக்கு மருத்துவ கொடுப்பனவும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, ‘நவோதயா வித்யாலயாவின் ஊழியர்களுக்கு மருத்துவ உதவித்தொகை ரூ .5 ஆயிரத்திலிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு TC வழங்கல் – பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு!
அவர்கள் அரசு மருத்துவமனையிலோ அல்லது மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவமனையிலோ சிகிச்சை பெறும்போது இந்த கொடுப்பனவை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் அரசு ஊழியர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் ஏற்பட்டாலும் இந்த சேவைகளை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இந்த சலுகைகள் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது’ என குறிப்பிடப்பட்டிருந்தது.