தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு TC வழங்கல் – பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு!
10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் (TC) கட்டாயம் வழங்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வி இயக்குனரகம் அனைத்து பள்ளிகளும் உத்தரவிட்டுள்ளது.
மாற்று சான்றிதழ்:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கப்படும். அதை வைத்து மாணவர்கள் 11ம் வகுப்பில் சேருவர். இது அனைத்து பள்ளிகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 12ம் வகுப்பு வரை அனைத்து விதமான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 1 முதல் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதையடுத்து ஜூன் 14 முதல் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களின் வருகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையும் தொடங்கியுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் 11ம் வகுப்பு சேர்க்கை அவர்களின் 9ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்று – இன்று முக்கிய ஆலோசனை!
அனைத்து பள்ளிகளும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் தயாரித்து வழங்க வேண்டும். அதே பள்ளியில் 11ம் வகுப்பு சேரவிருந்தாலும் மாற்று சான்றிதழ் அவசியம். அவர்களை புதிய மாணவர்களாக கணக்கிட்டு சேர்க்கை எண் வழங்கப்படும். மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் 11 ஆம் வகுப்பு சேர்க்கை நடைபெற கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. EMIS என்ற கல்வி மேலாண்மை அமைப்பு 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கட்டாயம் மாற்று சான்றிதழ் வழங்க வேண்டும். அதை வைத்து புதிய சேர்க்கை என் வழங்க வேண்டும் என பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.