தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்று – இன்று முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு மதிப்பெண் சான்று மற்றும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
மதிப்பெண் சான்று:
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்கு தற்போது மதிப்பெண் சான்று தேவைப்பட்டது வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய தளர்வாக கடந்த ஜூன் 14ம் தேதி முதல் பாதிப்புகள் குறைவாக காணப்படும் 27 மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த சூழலில் எந்த நிபந்தனைகளின் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நிறுத்தக்கூடாது என்றும் மாற்று சான்றிதழ் வழங்குவதில் எந்த பிரச்சனையும் இருக்க கூடாது என்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை வழங்க வேண்டும் என்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கல் – வெளியான முக்கிய அறிவிப்பு!!
இதை தொடர்ந்து மாணவர் சேர்க்கை, மதிப்பெண் சான்று உள்ளிட்டவை குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அவர்கள் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.