ஜூன் 20 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு உத்தரவு!
தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்லூரிகளுக்கு ஜூன் 15ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவித்திருந்த நிலையில், தற்போது ஜூன் 20ம் தேதி வரை விடுமுறையை நீட்டிப்பதாக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கோடை விடுமுறை நீட்டிப்பு:
கோவிட் -19 தொற்று பரவல் அதிகரித்து வந்த காரணத்தால் தெலுங்கானா மாநிலத்தில் மார்ச் 24ம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக கற்பித்தல் பணிகள் நடைபெற்றது. நடப்பு ஆண்டின் கடைசி வேலை நாளாக ஏப்ரல் 26ம் தேதியை அரசு அறிவித்தது. முன்னதாக ஏப்ரல் 27 முதல் மே 31 வரை அனைத்து பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையை மாநில அரசு அறிவித்தது. பின்னர் மே 31ம் தேதி அன்று ஜூன் 15ம் தேதி வரை கோடை விடுமுறையை நீட்டிப்பதாக அரசு அறிவித்தது.
TN Job “FB Group” Join Now
மாநிலத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான 6 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான பள்ளிகள் பிப்ரவரி கடைசி வாரத்தில் மீண்டும் திறக்கப்பட்டது. 9 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகள் பிப்ரவரி 1 அன்று மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தெலுங்கானா அரசு அனைத்து பள்ளிகள் மற்றும் மாவட்ட கல்வி பயிற்சி நிறுவன கல்லூரிகளுக்கு ஜூன் 20ம் தேதி வரை கோடை விடுமுறையை நீடிப்பதாக பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு TC வழங்கல் – பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு!
மாநிலத்தில் நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா தொற்று காரணமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான 53,79,388 மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டு அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு, 5.21 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உள் மதிப்பீட்டு அடிப்படையில் தேர்ச்சி செய்யப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.