நாடு முழுவதும் நவம்பர் வரை இலவச உணவுப் பொருட்கள் – 198 டன் தானியம் ஒதுக்கீடு!
இந்தியாவில் பிரதமரின் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தில் 198 டன் உணவு தானியம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இலவச உணவு தானியங்கள் :
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. அதனால் அரசு தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்தும் இயங்க தடை விதிக்கப்பட்டது. மக்கள் இந்த ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். வருமானம் இல்லாததால் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர்.
இந்தியாவில் முழு ஊரடங்கு நீட்டிப்பு அவசியம் – டெல்டா வகை கொரோனா தொற்று எதிரொலி!
அதனால் மாநில அரசு ரேஷன் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்களையும் வழங்கி வருகிறது. இதன் மூலம் மக்கள் ஊரடங்கு காலத்தில் உணவு பொருட்களை வாங்கி மக்கள் பயனடைகின்றனர். மாநில அரசுகளை தொடர்ந்து மத்திய அரசு சார்பில் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மூலம் ஏழை மக்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன. மே மற்றும் ஜூன் மாதங்களில் ரேஷன் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மூலம் 36 மாநிலங்களுக்கு மே மற்றும் ஜூன் மாதங்களில் 77.42 மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டமானது மக்களின் தேவைக்காக வரும் நவம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் வரும் மாதங்களில் தானியங்கள் வழங்குவதற்காக நாடு முழுவதும் 198.78 டன் மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.