இந்தியாவில் முழு ஊரடங்கு நீட்டிப்பு அவசியம் – டெல்டா வகை கொரோனா தொற்று எதிரொலி!
இந்தியாவில் கொரோனா வைரஸ் உருமாறி டெல்டா வகை வைரஸாக தற்போது பரவி கொண்டிருக்கிறது. இதனால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது அவசியம் என உலக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முழு ஊரடங்கு
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பேரலையாக உருவான கொரோனா பெருந்தொற்று உலகமெங்கிலும் அதி தீவிரமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. உலகளவில் இந்த வைரஸின் தாக்கமானது இன்று வரை குறைந்தபாடில்லை. அந்த வகையில் கொரோனா வைரஸானது உருமாறி ஒவ்வொரு நாட்டிலும் இரண்டாம், மூன்றாம் அலையாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்து வரும் வேளையில் கொரோனா வைரஸ் டெல்டா வகையாக உருமாறி உள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 1,005 பேர் உயிரிழப்பு – 48,786 பேருக்கு கொரோனா தொற்று!
இந்த வகை டெல்டா வைரஸ் அதி வேகமாக பரவும் தன்மையுடையதாகவும், அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வகை வைரஸானது தற்போது பிரிட்டன், பிரேஸில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவை பொருத்தளவு இந்த டெல்டா வைரஸ், டெல்டா பிளஸ் வைரஸாக உறுமாறியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பானது மஹாராஷ்டிரா, கேரளா, உத்திர பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போது கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வரும் சூழலில் மாநிலங்கள் தோறும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் சூழலில் டெல்டா பிளஸ் வகை அதிகமாக பரவி வருகிறது. இந்தியாவில் பரவி வரும் டெல்டா பிளஸ் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என உலக விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.