நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கா? வைரலான தகவலின் உண்மை நிலை!
இந்தியாவில் 3 ம் அலை தடுப்பு நடவடிக்கையாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட போவதாக தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மீண்டும் ஊரடங்கு :
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் பரவி வருகிறது. ஆரம்பத்தில் மத்திய அரசு இந்தியா முழுவதும் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மாநிலங்கள் நோய் பரவல் நிலையை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளையும் ஊரடங்கையும் அறிவித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு கூறியது. அதன்படி மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. பின்பு தொற்று படிப்படியாக குறைய ஆரம்பித்தது. நாடு இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் நிலையில் பேரிடராக மீண்டும் வைரஸ் தாக்கம் அதிகரித்தது. இரண்டாம் கொரோனா அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியது. வட மாநிலங்கள் அனைத்தும் கொரோனா பரவல் மையமாக மாறியது எதிர்பாராத அளவு உயிரிழப்புகள் ஏற்பட்டது.
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கா? வைரலான தகவலின் உண்மை நிலை!
முதல் அலையை விட இரண்டாம் அலையின் தாக்கம் மிக மோசமாக இருந்தது நாடெங்கும் மரணங்கள் தொடர்ந்து, சுமார் நாள் ஒன்றுக்கு 4000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் அனைத்து மாநிலங்களும் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தியது. நோய் பரவல் குறையாத காரணத்தால் பல மாநிலங்கள் ஊரடங்கை தொடர்ந்து நீட்டித்தது. தற்போது தொடர் ஊரடங்கு மற்றும் தடுப்பூசி விளைவாக தொற்று குறைய ஆரம்பித்துள்ளது அதனால் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மருத்துவர்கள், பெருந்தொற்று நிபுணர்கள் அனைவரும் 3 ம் அலை கொரோனா பரவும் என எச்சரித்துள்ளனர். இதனால் மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கை அறிவிக்கப் போவதாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில் இது வதந்தி என்பது தெரியவந்துள்ளது. மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு என்று வீடியோவை இணைய விஷமிகள் எடிட் செய்து வைரலாகி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஊரடங்கு குறித்த எந்த அதிகார பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.