தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை – ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம்!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அடையாள அட்டை
தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநில அரசு மட்டுமல்லாமல் மத்திய அரசும் பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அரசின் இந்த சலுகைகளை பெற மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயம் ஆகும். அந்த வகையில் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
2023 தென் மேற்கு பருவமழை காலத்தில் 8% அதிக மழைப்பொழிவு – வானிலை ஆய்வு மைய தலைவர் தகவல்!
அதன் படி திருப்பத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமை தாங்கி 122 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கினார். மேலும் இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், முடநீக்கு வல்லுனர் இனியன், சிறப்பு மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்,.