தேசிய அளவில் பெண்கள் உயர்கல்வி சேர்க்கை விகிதம் – கடந்த 5 ஆண்டுகளில் 18% உயர்வு!
கடந்த கல்வி ஆண்டில் தேசிய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் மாணவிகள் சேர்க்கை குறைவாக உள்ளது என்று கூறப்பட்ட நிலையில் கடந்த ஐந்து ஆண்டை ஒப்பிடுகையில் இது 18 சதவிகிதம் உயர்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி:
மத்திய அரசு கடந்த 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான உயர்கல்வி சேர்க்கை விவரம் குறித்த தகவலை தெரிவித்தது. இந்த அறிக்கை முடிவில் கடந்த கல்வி ஆண்டில் பெண்கள் உயர்கல்வி சேர்க்கை விகிதம் குறைவாக உள்ளது என்று தெரிவித்தது. மேலும் தேசிய அளவில் உயர் கல்வி மாணவர்கள் சேர்க்கையில் உத்தர பிரதேச மாநிலம் முதல் இடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பீடு முறைகள் – கல்வி வாரியம் விளக்கம்!
இந்நிலையில் தற்போது இது குறித்த புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த கல்வி ஆண்டில் பெண்கள் உயர்கல்வி சேர்க்கை விகிதம் குறைவாக இருந்தாலும் கடந்த 2015-16 முதல் 2019-20 ஆகிய ஐந்து ஆண்டை ஒப்பிடுகையில் இது 18.2 சதவிகிதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலை, அறிவியல் மற்றும் வணிகத்திற்காக முதுகலை மட்டத்தில் 2015-16 மற்றும் 2019-20 க்கு இடையில் பெண்கள் சேர்க்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஆனால் பி.சி.ஏ., பி.டெக்., அல்லது B.E இதுபோன்ற இளங்கலை படிப்புகளில் இது மிகக்குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஏ படிப்புகளில் சேரும் மாணவர்களின் சதவிகித பங்கு ஆண்களுக்கு 47.1% மற்றும் பெண்களுக்கு 52.9% ஆகும். அதேபோல் பிஎஸ்சியில் மொத்தம் 47.07 லட்ச மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் பெண்கள் 52.3% இருப்பினும் ஆனால் ஆண்கள் 54.8% இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக மாணவர் சேர்க்கை மாநிலமான உத்தர பிரதேச மாநிலத்தில் 49.1% ஆண்களும் 50.9% பெண்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.