CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பீடு முறைகள் – கல்வி வாரியம் விளக்கம்!
2021ம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10ம் வகுப்பு முடிவுகள், அதன் மதிப்பீடு முறையை பற்றி மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் அனைத்து வினாக்களுக்கும் விரைவில் விளக்கம் வெளியிடப்படும் என்று மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு முடிவுகள்:
நாடு முழுவதும் உள்ள கொரோனா பாதிப்புகள் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பொதுத்தேர்வுகளும் முன்னதாக தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து நிலைமை மீண்டு வராத காரணத்தால் முதலில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. சிபிஎஸ்இ வாரியம் நிலையான மதிப்பீடு முறை மூலம் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க முடிவு செய்திருப்பதாக அறிவித்தது.
தமிழக தனியார் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் வழங்குவதில் சிக்கல் – அதிகாரிகள் விளக்கம்!
இந்நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களின் இறுதி மதிப்பெண்களை வழங்கும் முறை குறித்த விவரங்களை கல்வி வாரியம் வெளியிட்டு, பள்ளிகள் ஜூன் 30ம் தேதிக்குள் கல்வி வாரியத்திடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஜூலை முதல் வாரத்தில் 10ம் வகுப்பு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி வாரியத்திடம் 10ம் வகுப்பு முடிவுகள் மற்றும் மதிப்பீடு முறை குறித்து அதிகமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளது. சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மாணவர்கள் மேலும் விவரங்களுக்கு கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in ல் தெரிந்து கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
மேலும், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகளும் கொரோனா காரணமாக ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். நன்கு வரையறுக்கப்பட்ட புறநிலை அளவுகோல்கள் படி, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இதில் எந்த விதமான ஆபத்தான முயற்சிகளும் எடுக்க முடியாது என்று பிரதமர் கூறியுள்ளார்.