நாடு முழுவதும் நாளை (மே 25) பாரத் பந்த் – எதற்கெல்லாம் தடை? முழு விபரம் இதோ!

0
நாடு முழுவதும் நாளை (மே 25) பாரத் பந்த் - எதற்கெல்லாம் தடை? முழு விபரம் இதோ!
நாடு முழுவதும் நாளை (மே 25) பாரத் பந்த் - எதற்கெல்லாம் தடை? முழு விபரம் இதோ!
நாடு முழுவதும் நாளை (மே 25) பாரத் பந்த் – எதற்கெல்லாம் தடை? முழு விபரம் இதோ!

இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் ஊழியர் சங்கங்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளது. இந்த போராட்டத்தில் என்னென்ன கோரிக்கைகள் வைத்து நடைபெற உள்ளது என்பதையும், நாளை எவையெல்லாம் இயங்கும் என்பதையும் பார்ப்போம்.

பாரத் பந்த்:

இந்தியாவில் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் ஊழியர் சங்கங்கள் நாளை நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதனால் பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பகுஜன் முக்தி கட்சியின் செயல் தலைவர் டிபி சிங் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இந்த போராட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்த உள்ளனர். இதில் முதலாவதாக சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு வேண்டும்.

Post Office இல் சேமிப்பு கணக்கு தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – முழு விபரம் இதோ!

இதையடுத்து தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அத்துடன் தனியார் துறையில் SC/ST/OBC இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இதனை தொடர்ந்து ஓடிசா மற்றும் மத்திய பிரதேச பஞ்சாயத்து தேர்தல்களில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தனி வாக்காளர் தொகுதி அமைக்கப்பட வேண்டும். இதையடுத்து பொதுமக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற போர்வையில் பழங்குடியின மக்களை அப்புறப்படுத்தக் கூடாது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

Exams Daily Mobile App Download

அத்துடன் தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தின் போது வணிக கடைகள் மற்றும் பொது போக்குவரத்து உள்ளிட்டவை மூட வேண்டும் என்று பகுஜன் முக்தி கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அத்துடன் இந்த போராட்டத்தை முன்னிட்டு நாளை என்னவெல்லாம் செயல்படும் அத்துடன் செயல்படாது என்பது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!