தமிழக மக்களுக்கு நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து – சுகாதாரத்துறை அமைச்சர்!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர்:
மத்திய அரசு நாட்டில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்றினை தடுக்கும் வகையில் மாநில அரசுகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் சுழற்சி முறையில் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மேலும்,தமிழகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனை செய்யாவிட்டால் பான் கார்டு செயலிழந்து விடும் – வருமானவரித்துறை எச்சரிக்கை!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது, ஒமைக்ரானின் எக்ஸ்.பி.பி வகை பரவல் தான் தமிழகத்தில் உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10க்கும் கீழ் தான் உள்ளது. மருத்துவமனைகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நாசி வழி செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், அவை கிடைத்தவுடன் பொதுமக்களுக்கு செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.