பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்து தீபாவளி கொண்டாட்டம் – ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொன்டு வெளியேறியுள்ள திருநங்கை நமீதா மாரிமுத்து தீபாவளியை முன்னிட்டு கலக்கலாக புகைப்படங்களை எடுத்து அதனை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் பிரபலம்:
மக்கள் மத்தியில் பிரபலமடைய கலைத்துறையினர் வித்தியாசமான பல முயற்சிகளில் முயன்று வருகின்றனர். ஒரு முறை பிரமபலமைந்து விட்டால் அதன் பிறகு அவர்கள் செய்யும் சின்னச்சின்ன விஷயங்களை கூட மக்கள் கவனிக்க தொடங்கி விடுகின்றனர். புகழின் உச்சியில் இருக்கும் போது கலைத்துறையினருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றது.
தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் – யூடுப் சேனல் வீடியோ!
அந்த வகையில் திருநங்கை நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்னால் மக்கள் மத்தியில் பரிட்சயம் இல்லாத நிலையில் வந்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியார்கள் தங்கள் கடந்து வந்த பாதை டாஸ்கில் தங்களது வாழ்கை பயணத்தை கூறினார்கள். பலரது கதையும் மக்களை கவர்ந்த போதிலும், திருநங்கை நமீதா மாரிமுத்துவின் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. தனது ஒட்டு மொத்த சமூகத்தின் சார்பாகவும் தான் பேசுவதாக சமூக சிந்தனையுள்ள கோரிக்கையையும் அவர் வைத்தார்.
ராதிகாவை கண்டிக்கும் அம்மா, அப்பாவுடன் சண்டை போடும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
இதனால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து விட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு முதல் வாரம் மட்டுமே முடிவடைந்த நிலையில், அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். ஆனால் அத்ரகன் காரணங்கள் ஏதும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு வண்ண மயமான உடைகளை அணிந்து விதவிதமாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.