ஹோலி பண்டிகை கொண்டாட தடை – மாவட்ட அரசு அறிவிப்பு!!
நாக்பூரில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக மார்ச் 28, 29 ஆம் தேதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹோலி பண்டிகை:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மத்திய பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தாக்கம் வேகமாக பரவி வருகிறது. மத்திய மாநில அரசுகளும் பல கட்டுப்பாடு விதிகளை அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் வட மாநிலங்களில் மிகவும் பிரபல பண்டிகையான ஹோலி பண்டிகை மார்ச் மாதம் 28, 29 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. தீபாவளி பண்டிகையை போல இந்தியாவில் பிரபலமான பண்டிகையான ஹோலி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா தாக்கம் காரணமாக நாக்பூரில் மார்ச் மாதம் 29 ஆம் தேதி அலுவலகங்கள், சந்தைகள், உணவகங்கள், போன்றவை மூடப்படும்.
தேர்தல் பாதுகாப்பு பணிகளில் கல்லூரி மாணவர்கள் – காவல் கண்காணிப்பாளர் தகவல்!!
அத்தியாவசிய பொருள்களுக்கான கடைகள் மட்டுமே திறந்திருக்கும், அவைகளும் 1 மணி வரை இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கூட்டமாக பொது இடங்களில் கூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் கொரோனா காரணமாக மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.