ஜூன் 11 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
நாகலாந்து மாநிலத்தில் கொரோனா 2 ஆம் அலை தீவிரமடைந்து வரும் காரணத்தால் மே 31 ஆம் தேதியுடன் முடிவடையும் முழு ஊரடங்கு உத்தரவை ஜூன் 11 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
முழு ஊரடங்கு:
கொரோனா 2 ஆம் அலை தாக்கம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக மாநிலங்கள் தோறும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகாலாந்து மாநிலம் முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கு ஜூன் 11 வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மாநில சுகாதாரத் துறையின் ஆலோசனையின் படி ஊரடங்கு குறித்த முடிவை உயர் மட்ட குழு (HPC) எடுத்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்து HPC செய்தித் தொடர்பாளர் எம்மோன்லுமோ கிகோன் அவர்கள் ‘சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், நாகாலாந்தில் முழு ஊரடங்கு ஜூன் 11 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு? விரைவில் அறிவிப்பு!
இதற்கு முன்னதாக நாகலாந்தில் ஏப்ரல் மாத இறுதியில் இருந்தே இரவுநேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இம்மாதம் 12 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதில் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மே 31 ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டுப்பாடுகளை ஜூன் 11 ஆம் தேதி வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.