தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு? விரைவில் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று வீரியம் எடுத்து பரவி வரும் நிலையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் மூன்று மாத காலமாக கொரோனா வைரஸ் தொற்று வீரியம் அதிகரித்து வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த மே 10ம் தேதி முதல் தளர்வுகள் அடங்கிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக மக்கள் முறையாக பின்பற்றவில்லை. இதன் எதிரொலியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் இருந்து வந்தது.
தமிழகத்தில் ஜூன் 7 வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு – அரசு உத்தரவு!!
தற்போது தமிழகத்தில் தினசரி ஏற்படும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை சுமார் 35 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதன் காரணமாக கடந்த மே மாதம் 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கின் பொழுது மருத்துவ சேவை, பால் விநியோகம், செய்தித்தாள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தளர்வுகளற்ற ஊரடங்கு வருகிற மே மாதம் 31ம் தேதி உடன் முடிவுக்கு வரவுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைனில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு? அமைச்சர் விளக்கம்!
இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் தமிழக முதல்வர் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் தேவைப்பட்டால் தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.