சமந்தாவை விவாகரத்து செய்து விட்டு வேறொரு பெண்ணை மணக்கும் நாகசைதன்யா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா மற்றும் தெலுங்கு பிரபலம் நாகசைதன்யாவின் விவாகரத்து பிரச்சனைக்கு பிறகு தற்போது நாகசைதன்யா எடுத்துள்ள முடிவு ரசிகர்களை அதிர்ச்சியாகியுள்ளது.
சமந்தா, நாகசைதன்யா :
சமந்தா ரூத் பிரபு ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் தமிழ் சினிமா துறையில் பானா காத்தாடி படம் மூலம் அறிமுகமாகி தற்போது அதிக ரசிகர் பெருமக்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகையாக வலம் வருகிறார். இவ்வாறு பெரும்பாலும் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வந்த சமந்தா 2010 இல் கௌதம் வாசுதேவ் மேனனின் தெலுங்கு காதல் திரைப்படமான ஏ மாயா சேசவே மூலம் தனது நடிப்பை தெலுங்கு சினிமாவுக்கு அறிமுகம் செய்தார்.
அந்தத் திரைப்படம் அவருக்கு சிறந்த பெண் அறிமுகத்திற்கான ஃபிலிம்பேர் விருதையும், நந்தி விருதையும் பெற்றுத் தந்தது. இவ்வாறு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நகைகளில் ஒருவரான சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி பலரும் பேசும் படியாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு சமந்தா ஹைதராபாத்தில் வசித்து வந்தார்.
இருவரும் திருமண வாழ்க்கையில் நான்கு வருட காலமாக ஒன்றாக சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென விவாகரத்து செய்யப் போவதாக இருவரும் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்கள். இதனால் அதிர்ச்சியான ரசிகர்கள் இதற்கு காரணம் என்னவாக இருக்கும்? என்று குழம்பி, அதற்கான விடை கிடைப்பதற்க்குள் நாகசைதன்யா செய்ய போகும் காரியம் ரசிகர்களை மேலும் அதிர்ச்சி படுத்தியுள்ளது. அதாவது நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாகவும், அந்த பெண் நடிகை இல்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.