நாகசைதன்யா, சமந்தா திருமண வாழ்க்கை முறிவு – கூட்டாக விவாகரத்து அறிவிப்பு!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. அவர் தனது காதல் கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து இருவரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர்.
சமந்தா விவாகரத்து:
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகைகளின் வரிசையில் வந்தவர் நடிகை சமந்தா. அவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நல்ல படங்களை கொடுத்துள்ளார். அதன் மூலமாக தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஆந்திராவிலேயே செட்டில் ஆகிவிட்டார். திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் தங்களது குடும்ப பெயரான அக்கினேனி என்பதை நீக்கிவிட்டார்.
ஜீ தமிழ் ‘சர்வைவர்’ நிகழ்ச்சி வைல்டு கார்டு என்ட்ரியில் 2 போட்டியாளர்கள் – வெளியான ப்ரோமோ!
அதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு, இருவரும் பிரியப் போகிறார்கள் என தினசரி வதந்திகள் வெளியானது. ஆனால் இது குறித்து சமந்தா மாற்றும் நாக சைதன்யா தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. நாளுக்கு நாள் இவர்களை பற்றிய தகவல் வெளியாகியிருந்தது. மேலும் அமீர்கானுக்கு நாகார்ஜுனா குடும்பத்தினர் வீட்டில் விருந்து அளித்தனர். இதில் நாகார்ஜுனா, நாக சைதன்யா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் சமந்தா மட்டும் கலந்து கொள்ளவில்லை.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ பிரபலம் ஐஸ்வர்யாவிற்கு விரைவில் திருமணம் – கணவருடன் ஷாப்பிங்!
இதனால் இருவரும் நிச்சயமாக விவாகரத்து செய்ய இருப்பதாக உறுதியான தகவல் வந்தது. மேலும் வதந்திகளை தடுக்க சமந்தா நீதிமன்ற உதவியை நாட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாக சைதன்யா தனது ட்விட்டர் பக்கத்தில் விவாகரத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் நாங்கள் இருவரும் உண்மையாகவே பிரிய இருப்பதாகவும் இதிலிருந்து மீண்டு வர தனிமை தேவைப்படுகிறது என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதே பதிவை சமந்தாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இதன் மூலம் இருவரும் பிரிவது அதிகாரபூர்வமாக உறுதியாகி உள்ளது.
So bad decition