WhatsApp பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மல்ட்டி டிவைஸ் வசதி!!
மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்ஆப் தற்போது ஒரு அறிக்கையில் மல்ட்டி டிவைஸ் பீட்டா பதிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.
வாட்ஸ்ஆப் அறிவிப்பு:
நாடு முழுவதும் தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் வாட்ஸ்ஆப் செயலியை அதிகம் பயன்படுத்துகிறார்கள். கொரோனா பரவல் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி உள்ள நிலையில் ஆன்லைன் பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் வாட்ஸ்ஆப் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் வாட்ஸ்ஆப் நிறுவனமும் பல சிறந்த வசதிகளை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.
கொரோனா பாதிப்பு அடிப்படையில் மும்மடங்கு ஊரடங்கு – கேரள அரசு அறிவிப்பு!
இந்நிலையில் தற்போது அந்த நிறுவனம் ஒரு புதிய வசதியை வெளியிட உள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவித்தது. அந்த வசதி வாட்ஸ்ஆப்பில் பலதரப்பட்ட ஆதரவு அம்சம் உள்ள பீட்டா பதிப்பில் சோதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் வாட்ஸ்அப்பின் பிரபலமான அம்ச டிராக்கரான WABetaInfo ஜூலை 6 அன்று ட்வீட் செய்தது, மல்ட்டி டிவைஸ் சப்போர்ட் விரைவில் சோதனைக்கு உட்படுத்தப்படும். டிராக்கர் விரைவில் பொது பீட்டா திட்டத்தில் எவ்வாறு பங்கேற்பது என்பதோடு ரோல்அவுட்டை அறிமுகப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து இந்த செயலியில் மல்ட்டி டிவைஸ் வசதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வசதி மூலமாக பயனர்கள் டெஸ்க்டாப்பில் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த இனி தங்கள் தொலைபேசிகளை இணையத்துடன் இணைக்க தேவையில்லை. மேலும் ஒரு வாட்ஸ்அப் கணக்கில் நான்கு கூடுதல் சாதனங்களை இணைக்க முடியும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன் மூலமாக ஒரே எண்ணில் இருந்து நான்கு சாதனங்களுடன் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும். மேலும் இந்த திட்டத்தை பயன்படுத்த Android மற்றும் iOS இயங்குதளங்களின் சமீபத்திய பீட்டா பதிப்புகளில் இருக்க வேண்டும். மேலும் இதை அனைவரும் வழங்குவதற்கு முன் சோதனை முடிவு செய்துள்ளது, மல்ட்டி டிவைஸ் சப்போர்ட் ஒரு தொழில்நுட்ப சவாலாக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.