கொரோனா பாதிப்பு அடிப்படையில் மும்மடங்கு ஊரடங்கு – கேரள அரசு அறிவிப்பு!
கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக தொற்று பாதிப்பு அடிப்படையில் பகுதிகளாக பிரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் அமல்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நிலைமையை சரி செய்ய பல மாநிலங்கள் பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர். கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக தொற்று பாதிப்பு அடிப்படையில் பகுதிகளாக பிரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா பாதிப்பு 5 சதவிகிதத்திற்கு கீழ் இருந்தால் ஏ பிரிவு எனவும், 5 முதல் 10 சதவிகிதமாக இருந்தால் பி பிரிவு எனவும், 10 முதல் 15 சதவிகிதமாக இருந்தால் சி பிரிவு எனவும், அதற்கு மேல் இருந்தால் டி பிரிவு எனவும் பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பேருந்துகளில் இலவச பயணச்சீட்டு – இன்று முதல் விநியோகம்!
அந்த வகையில் 82 உள்ளாட்சி அமைப்புகள் ஏ பிரிவிலும், 415 உள்ளாட்சி அமைப்புகள் பி பிரிவிலும், 362 உள்ளாட்சி அமைப்புகள் சி பிரிவிலும், 175 உள்ளாட்சி அமைப்புகள் டி பிரிவிலும் உள்ளன. இந்நிலையில் ஏ பிரிவில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. பி பிரிவிற்கு பகுதியளவு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. சி பிரிவிற்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பினராயி விஜயன் தலைமையில் நடந்த கொரோனா சீராய்வு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் ஏ மற்றும் பி பிரிவுகளில் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல சி பிரிவில் 50 சதவிகித பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டல்கள், உணவகங்கள் இரவு 9.30 மணி வரை செயல்பட ஏ மற்றும் பி பிரிவுகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும் உள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஏசி வசதியின்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
ஆனால் அதிகபட்சமாக 20 பேருடன் சமூக இடைவெளி கடைபிடித்து வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டி பிரிவில் ஒருவாரத்திற்கு ட்ரிபிள் லாக்டவுன் எனப்படும் மும்மடங்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி அல்லது கொரோனா பரிசோதனை அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.