கோலாகலமாக நடக்கும் வருண், சத்யா திருமண வைபோகம் – “மௌன ராகம் 2” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “மௌன ராகம் 2” சீரியலில் வருண் சத்யா இடையே இருந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிந்து இருவரும் சேர்ந்து வாழ தொடங்கி இருக்கும் நிலையில், அவர்களது திருமண வைபோகம் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
மௌன ராகம் 2:
மௌன ராகம் சீரியலின் முதல் சீசனை விட இரண்டாவது சீசனில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இது சத்யா திருமணம் செய்துள்ள குடும்பத்தில் மாமனாரின் தங்கையாக இருக்கும் ஷீலா தான் வில்லியாக இருக்கிறார். தனது கணவரை கொன்றதால் பழி வாங்கும் எண்ணத்தில் இருக்கிறார். அதனால் இந்த குடும்பத்திற்கு எந்த நன்மையும் நடக்க கூடாது என நினைத்து பல வேலைகளை செய்கிறார். அதில் வருண் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.
பாரதியிடம் உண்மையை சொல்லும் வருண் மற்றும் துர்கா – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
ஆனால் சத்யா வந்ததும் வருணை மாற்ற பல முயற்சிகளை செய்கிறார். சத்யா மீது வருண் அதிக காதலுடன் இருப்பதால் அவர்களை பிரிக்க வேண்டும் என நினைத்து ஷீலா பல வேலைகளை செய்கிறார். இருந்தாலும் சத்யா வருண் காதல் மிகவும் ஆழமாக இருக்கிறது. சத்யா குறும்பட போட்டியில் வெற்றி பெற்றதால் அதை பொறுக்காமல் சுருதி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். அவர் எங்கே என அனைவரும் தேட பரபரப்பாக கதை சென்று கொண்டிருக்கிறது
இந்நிலையில் சீரியலில் அடுத்த ட்விஸ்ட் வர இருக்கிறது. அதாவது வருண் சத்யாவிற்கு மீண்டும் திருமணம் நடைபெற இருக்கிறது. அது குறித்து ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் வருண் சத்யா காதலுடன் ஒருவரை ஒருவர் திருமணம் செய்ய இருக்கின்றனர். இந்த திருமண வைபோகம் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. ஆனால் இது எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ என்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். இது போல மீண்டும் திருமணம் நடைபெற வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.