பாரதியிடம் உண்மையை சொல்லும் வருண் மற்றும் துர்கா – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி கண்ணம்மா சேர்ந்து வாழ இருப்பது போல காட்டப்பட்டு இன்னும் 5 நாட்களில் என ட்விஸ்ட் வைக்கப்பட்டு ப்ரோமோ வெளியாகி உள்ளது. 5 நாட்களில் என்ன நடக்க இருக்கிறது என்பது பற்றி தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் மக்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் கண்ணம்மாவை சந்தேகப்பட்டு பாரதி 8 ஆண்டுகள் பிரிந்து இருக்க தற்போது நீதிமன்ற உத்தரவின் படி ஒரே வீட்டில் இருக்கின்றனர். அப்போது கண்ணம்மாவின் நேர்மையை பார்த்து பாரதி மனம் மாற நீதிகாத்த அம்மனிடம் நீதி வாங்க கண்ணம்மா பக்கம் நீதி இருப்பதாக சொல்கிறது. அதனால் பாரதி மனம் மாற ஒரு கண்டிஷன் இருக்கிறது. அதை நீ செய்தால் சேர்ந்து வாழ இருப்பதாக சொல்கிறார்.
இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் இன்னும் 5 நாட்களில் என்ற ட்விஸ்ட் வைக்கப்பட்டுள்ளது. அதில் என்ன நடக்கும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். இந்நிலையில் அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் பாரதி சந்தேகப்படும் வருண் பாரதியை சந்தித்து உண்மையை சொல்கிறார். அடுத்து துர்காவும் போன் செய்து பாரதியிடம் எல்லா உண்மையையும் சொல்ல, பாரதி தவறு செய்து விட்டோம் என நினைத்து கதறி அழுகிறார்.
ராதிகா, கோபி பற்றிய உண்மையை கண்டுபிடித்த பாக்கியா – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
இனி வரும் எபிசோடுகளில் சீரியல் சூடுபிடிக்க இருக்கிறது. மேலும் பாரதி லட்சுமி தனக்கு பிறந்த குழந்தையா என கண்டுபிடிக்க DNA டெஸ்ட் எடுக்க, அதில் பாரதி தான் அப்பா என வருகிறது. அதனால் இனிமேல் பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து வாழ இருக்கின்றனர். ஆனால் வில்லி வெண்பா இன்னும் அமைதியாக இருப்பதால் அவர் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனையை உண்டாக்க இருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.