‘குக் வித் கோமாளி’ புகழுக்கு விரைவில் திருமணம்? காதலிக்கு அவரே கொடுத்த சர்பிரைஸ்! ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்புகளை பெற்று வரும் புகழ் சமூக வலைதளங்களில் முதன் முதலாக தனது காதலியை அவரது பிறந்தநாள் அன்று அறிமுகம் செய்து வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
நடிகர் புகழ்
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஒரு சிறந்த நகைச்சுவை நட்சத்திரமாக அறியப்பட்டவர் புகழ். பல ஆண்டுகளாக, பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பெறுவதற்கு போராடி வந்த புகழுக்கு ஒரு மைல் கல்லாக அமைந்தது இந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தான். அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு வரும் புகழ், தனது நகைச்சுவையான பேச்சாலும், நடிப்பாலும் மக்களை பெரிதும் கவர்ந்து வந்தார்.
ராதிகா, கோபி பற்றிய உண்மையை கண்டுபிடித்த பாக்கியா – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
இதன் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். குறிப்பாக புகழின் அட்டகாசமான நடிப்பினால் மட்டுமே இந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு இவ்வளவு ரீச் கிடைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. இப்படி 2 சீசன்களில் கிடைத்த வரவேற்பை அடுத்து புகழ் தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் புகழ் ஒரு ரியா என்ற பெண்ணை காதலித்து வருவதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
விரைவில் முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்? இயக்குனர் கொடுத்த விளக்கம்! ரசிகர்கள் உற்சாகம்!
இது பற்றிய பேச்சுக்கள் அவ்வப்போது அடிபட்ட வண்ணம் இருந்த நிலையில், தற்போது தனது காதலியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து லவ் யூ டார்லிங் என்று பதிவிட்டுள்ளார் புகழ். இது தவிர ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி, சக்தி, நடிகர் யோகேஷ் ஆகியோரும் அந்த பெண்ணுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இப்போது புகழின் காதலிக்கு பிரபலங்கள் வெளியிட்டுள்ள இந்த பிறந்தநாள் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வர, புகழுக்கு எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் வலைதளங்களில் கேள்வி எழுப்பத் துவங்கியுள்ளனர்.