கார்த்திக்கு போன் செய்து நடந்ததை சொல்லும் சத்தியா, அடுத்து நடக்கும் ட்விஸ்ட் – வெளியான “மௌன ராகம் 2” ப்ரோமோ!!
விஜய் டிவி “மௌன ராகம் 2” சீரியலில், மல்லிகா சத்யாவை ஊருக்கு வர சொல்லி அழைக்கிறார். ஆனால் சத்யா நான் வரமாட்டேன் என சொல்ல, மல்லிகா வீட்டை விட்டு கிளம்புகிறார். இது குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
மௌன ராகம் 2:
மௌன ராகம் 2 சீரியலில், வருண் பற்றிய உண்மையை மல்லிகா தெரிந்து கொள்ள வேண்டும் என ஷீலா திட்டமிட்டு, பூசணிக்காய்யில் கற்பூரம் ஏற்றி மல்லிகாவிடம் கொடுத்து விடுகிறார். அப்போது அதை பார்த்த வருண் கத்தி மயக்கம் அடைந்து விடுகிறார். பின் மல்லிகாவுக்கு எல்லா உண்மையும் தெரிய வருகிறது. மல்லிகாவை பிரபாகரன் எவ்வளவோ சமாதானபடுத்த அவர் ஏற்க மறுக்கிறார். பின் சத்யாவை ஊருக்கு வரும்படி அழைக்கிறார். அப்போது ஷீலா வருணிடம் சொல்லிவிட்டு போக சொல்ல, சத்யா கார்த்திக்கு போன் செய்து நடந்ததை சொல்கிறார்.
சத்யா வருணிடம் பேசிவிட்டு மல்லிகாவிடம் நான் ஊருக்கு வர மாட்டேன் என சொல்கிறார். இது தான் என்னுடைய வீடு, அவர் என்னை தொட்டு தாலி கட்டிய கணவர் என சொல்ல, மல்லிகா அப்போ நான் வெளியே செல்கிறேன் என சொல்கிறார். சத்யா எவ்வளவோ தடுத்தும் கேட்கவே இல்லை. இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
சமந்தா, நாக சைதன்யாவின் 4வது திருமண நாள் இன்று – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
அதில் சத்யா மீண்டும் கார்த்திக்கு போன் செய்து அம்மா வீட்டை விட்டு சென்றுவிட்டார்கள் என சொல்கிறார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை என சொல்ல, கார்த்திக் எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். அப்போது மல்லிகா காரில் சென்று கொண்டிருக்க கார் வேறு பக்கமாக போகிறது. அப்போது மல்லிகா ஏன் என கேட்க, அந்த பக்கம் வேலை நடக்கிறது என சொல்லி ட்ரைவர் சமாளிக்கிறார். பின் கார் நிற்க ட்ரைவர் இறங்கி செல்கிறார். அப்போது மல்லிகா என்ன நடக்கிறது என தெரியாமல் இருக்க கார்த்திக் வந்து காரை ஓட்ட அமர்கிறார். இதை பார்த்து மல்லிகா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.