சமந்தா, நாக சைதன்யாவின் 4வது திருமண நாள் இன்று – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக பிரபலமானவர் நடிகை சமந்தா, அவரது கணவரை சமீபத்தில் விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் இன்று அவருக்கு திருமண நாள் என்பதால் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை சமந்தா:
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களை நடித்து புகழ் பெற்ற நடிகை சமந்தா, 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வந்த நாக சைதன்யா – சமந்தா விவகாரத்து பெற இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், என்ன காரணத்திற்காக இருவரும் பிரிகின்றனர் என்பதை இருவருமே சொல்லவே இல்லை. அது மட்டும் இல்லாமல் இவர்களின் 4வது திருமணம் நாள் கொண்டாடபட இருந்த நிலையில் இருவரும் நாள் அறிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கலர்ஸ் தமிழில் ‘எங்க வீட்டு மீனாட்சி’ புதிய சீரியல் அறிமுகம் – அக்டோபர் 18 முதல் ஒளிபரப்பு!
மேலும் சமந்தா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தன்னுடைய கணவர் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை நீக்கிவிட்டு சமந்தா ரூத் என பழைய பெயரை மீண்டும் வைத்துள்ளார். இந்நிலையில் இன்று சமந்தா நாக சைதன்யாவின் நான்காவது திருமண நாள். ஆனால் அவர்கள் ஒன்றாக இல்லாததால் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் இருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் திருமண நாளில் சமந்தா புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் தொலைந்து காணப்பட்ட படங்களின் பாடல்கள். பள்ளத்தாக்கில் மனச்சோர்வு எதிரொலி மற்றும் பழைய காதலர்களின் பாடல்கள். பழைய பங்களாக்கள், படிக்கட்டுகள் மற்றும் சந்துகளில் காற்றின் ஒலி என்று பதிவு செய்துள்ளார். இதே கடந்த ஆண்டு திருமண நாளில் அவர் நீ எனக்கானவன் நான் உனக்கானவள், எந்த கதவு வந்தாலும் அதை நாம் ஒன்றாக திறப்போம் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் கணவா என்று பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.