கணவரை நினைத்து வருத்தப்படும் பவ்னி ரெட்டி, பசிக்கிதா என கேட்கும் பிரியங்கா – பிக் பாஸ் 2வது ப்ரோமோ ரீலிஸ்!

0
கணவரை நினைத்து வருத்தப்படும் பவ்னி ரெட்டி, பசிக்கிதா என கேட்கும் பிரியங்கா - பிக் பாஸ் 2வது ப்ரோமோ ரீலிஸ்!
கணவரை நினைத்து வருத்தப்படும் பவ்னி ரெட்டி, பசிக்கிதா என கேட்கும் பிரியங்கா - பிக் பாஸ் 2வது ப்ரோமோ ரீலிஸ்!
கணவரை நினைத்து வருத்தப்படும் பவ்னி ரெட்டி, பசிக்கிதா என கேட்கும் பிரியங்கா – பிக் பாஸ் 2வது ப்ரோமோ ரீலிஸ்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை பற்றி சொல்கின்றனர். இந்நிலையில் நான்காவது நாளான இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதில் முதல் டாஸ்க்காக போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை பற்றி கதையாக சொல்ல வேண்டும். அந்த கதைக்கு மற்ற போட்டியாளர்கள் லைக்குகள், இதயங்கள், டிஸ்லைக்குகள் தர வேண்டும். இந்நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களது வாழ்க்கையில் நடந்த சோகங்களை கதையாக சொல்லி வருகின்றனர். அதை கேட்டு பலர் அழுகின்றனர்.

சமந்தா, நாக சைதன்யாவின் 4வது திருமண நாள் இன்று – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

இதற்கான முதல் ப்ரோமோவில் திருநங்கைகளின் கஷ்டங்கள் பற்றி நடிகை நமிதா மாரிமுத்து பேசி தனது சோகத்தை கண்ணீருடன் வெளிப்படுத்தினார். அதேபோல மற்ற போட்டியாளர்களும் அவரது கதைக்கு கண்ணீர் வடித்தது போல காட்டப்பட்டது. குழந்தைகளின் மாற்றத்தை புரிந்துக் கொண்டு பெற்றோர்கள் இருக்க வேண்டும் என அவர் சொல்லி அழுதுள்ளார். தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், பவ்னி ரெட்டி மதுமிதாவுடன் அழுது கொண்டிருக்கிறார்.

கலர்ஸ் தமிழில் ‘எங்க வீட்டு மீனாட்சி’ புதிய சீரியல் அறிமுகம் – அக்டோபர் 18 முதல் ஒளிபரப்பு!

அப்போது தனது கணவர் இறந்து 5 ஆண்டுகள் ஆகிறது. அவரை நினைத்துக் கொண்டே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு பெரிய நடிகை ஆக வேண்டும் என கனவு இருக்கிறது என சொல்லி அழுகிறார். அப்போது அங்கே வந்த பிரியங்கா அங்கிருந்து பார்த்தேன் நீ ஏன் அழுது கொண்டிருந்த என கேட்கிறார். பசிக்கிதா அதான் அழுகிறாயா என கேட்க, ஆமாம் ஆந்திரா சாப்பாடு வேண்டும் என பவ்னி சொல்கிறார். உடனே பிரியங்கா அண்ணாச்சி ஏதோ காரம் செய்து வைத்திருக்கார். அதில் நாக்கை உள்ளே விட்டுக்கொள் பின் ஆந்திரா சாப்பாடே வெறுப்பாக மாறிவிடும் என சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!