பல ஆண்டுகளுக்கு பின் சந்திக்கும் மல்லிகா, கார்த்திக் – வெளியான “மௌன ராகம் 2” ப்ரோமோ!
விஜய் டிவி “மௌன ராகம் 2” சீரியலில் சத்தியாவிற்கும், வருணிற்கும் கல்யாணம் ஆனது தெரிந்து மல்லிகா வீட்டை விட்டு கிளம்புகிறார். அப்போது கார்த்திக் காரில் மல்லிகா வந்த கார் இடித்து விடுகிறது. இதனால் சுகுமார் வெளியே சென்று கார்த்திக்கிடம் மல்லிகாவை தனது தங்கை என அறிமுகம் செய்து வைக்கிறார்.
மௌன ராகம் 2:
விஜய் டிவி “மௌன ராகம் 2” சீரியல், முதல் சீசனின் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்போது கார்த்திக், மல்லிகா குறித்த உண்மை வெளியாகும் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. சக்திக்கும், வருணிற்கும் கல்யாணம் நடந்ததை கண்டுபிடித்த மல்லிகா மிகவும் கோபப்படுகிறார். சக்தி எவ்வளவோ அழுதும் மல்லிகா காதில் வாங்காமல் இருக்கிறார்.
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் – வெளியான புகைப்படம்!!
பின்னர் சுகுமாரிடம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். ஒரு பக்கம் கார்த்திக்கிடம் சத்யா பெயரில் இருப்பது சக்தி தான என்று காதம்பரி சண்டை போடுகிறார். அவரும் அதை பற்றிய நினைப்பில் காரில் வந்து கொண்டிருக்கிறார். தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கார்த்திக் காரில் மல்லிகா வந்த கார் இடித்து விடுகிறது. டிரைவர் வெளியே சென்று பார்க்க கார்த்திக் காரின் ஜன்னலை திறக்கிறார்.
பின்னர் சுகுமார் கீழே இறங்கி வந்து கார்த்திக்கிடம் பேசுகிறார். என்னை நியாபகம் இருக்கிறதா நான் தான் உங்களுடன் பாட சத்தியாவை அழைத்து வந்தேன் என சொல்கிறார். காரில் இருக்கும் மல்லிகா எட்டி பார்க்க கார்த்திக்கை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். யாரை பார்க்க கூடாது என நினைத்தோமோ அவரை பார்த்து விட்டோம் என காரில் மறைந்து கொள்கிறார். அப்போது சுகுமார் என் தங்கச்சி காரில் தான் இருக்காங்க என்று சொல்லி அவங்க தான் சத்தியாவின் அம்மா என்று சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
மல்லிகா வேறு வழியில்லாமல் காரில் இருந்து இறங்கி வர கார்த்திக் அவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். கார்த்திக்கும், மல்லிகாவும் சேர்ந்து விடுவார்களா என்று எதிர்பார்ப்பு இந்த ப்ரோமோ பார்த்ததும் அதிகரித்துள்ளது. மௌன ராகம் 2வில் என்னதான் பழைய காதலாக இருந்தாலும் மல்லிகா கார்த்திக் இடையே மாறாத அன்பு இன்றும் உள்ளது ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.