Post Office இல் அதிக லாபம் தரும் சேமிப்பு திட்டம் – ரூ. 16 லட்சம் வரை ரிட்டன்ஸ்! விவரம் இதோ!
இந்திய அஞ்சல் துறை தனது வாடிக்கையாளர்களுக்கு பல வகையான சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி அதில் பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் RD திட்டம் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
RD திட்டம்:
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் போது விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தனர். அப்போது தான் சேமிப்பின் பயனையும் உணர்ந்தனர். இந்த நேரத்தில் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாதுகாப்பான முதலீடு திட்டத்தில் ஒன்று தொடர் வைப்பு நிதி திட்டம். இது நிலையான மற்றும் நல்ல வட்டி விகிதங்களை அளிக்ககூடிய திட்டம் என்பதால் பலரும் இதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இத்திட்டத்தில் 1 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை முதலீடு செய்யலாம்.
Exams Daily Mobile App Download
18 வயதுக்கும் மேற்பட்ட இந்திய குடிமக்களாக இருப்பவர்கள் தொடர் வைப்பு நிதி வங்கிக் கணக்கை தொடங்கலாம். மேலும் அஞ்சலக தொடர் வைப்பு திட்டம் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு பாதுகாப்பு மற்றும் வருவாய் இரண்டையும் அளிக்கிறது. இந்த தொடர் வைப்புத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 5.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சேரும் நபர்கள் ஒரு வருடத்திற்குப் பிறகு 50 சதவீதம் வரை கடனாகப் பெறலாம். RD கணக்கை முதிர்வு தேதியிலிருந்து 5 ஆண்டுகள் வரை டெபாசிட் இல்லாமல் வைத்திருக்க முடியும். ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 முதலீடு செய்தால் 10 ஆண்டுகளில் அந்தத் தொகையானது அதிகமாகும்.
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் புது திருப்பம் – முக்கிய தகவல் வெளியீடு!
அதாவது 5.8 சதவீத வட்டி விகிதத்தில் 16 லட்சமாக உங்களுக்கு கிடைக்கும். இதில் ஒவ்வொரு காலாண்டிலும் கூட்டு வட்டி கணக்கிடப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானத்தை அளிக்கிறது. மேலும் தொடர் வைப்பு திட்டத்தில் ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். மேலும் இருவர் இணைந்து கூட கணக்கு தொடங்கிக் கொள்ளலாம். தனிநபர் அக்கவுண்டினை, ஜாயிண்ட் அக்கவுண்டாக மாற்றும் வசதியும் உள்ளது.
தேவை