தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு – 25 ஆயிரம் பேர் கருத்து!
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு பாதுகாப்பானது இல்லை என்ற அடிப்படையில் அவற்றை ரத்து செய்வது குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 25 ஆயிரம் பேர் அளித்துள்ள கருத்துக்களின் படி, நீட் தேர்வு வேண்டாம் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.
நீட் தேர்வு
இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பெரும் சவாலானதாக இருக்கிறது என்பது பலரது கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு பாதுகாப்பானது அல்ல என பலரது தரப்பில் இருந்து, தேர்வுக்கு எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது ஆட்சியமைத்துள்ள புதிய அரசு, நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
CA ஜூலை மாத தேர்வர்கள் கவனத்திற்கு – ICAI முக்கிய அறிவிப்பு!
நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை குறித்து ஆய்வு செய்த குழு, தேர்வுகளை நடத்துவது பாதுகாப்பானது அல்ல என கருத்து தெரிவித்தனர். இதை தொடர்ந்து மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது 2 ஆம் கட்டமாக நீட் தேர்வு குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நீதிபதி ஏ.கே.ராஜன், நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அரசிடம் ஒரு மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் மக்களின் கருத்தை இக்குழு நாடியுள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் பொது மக்கள், நீட் தேர்வு குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்க [email protected] என்ற இணையதள முகவரியில் வரும் 23 ஆம் தேதிக்குள் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் படி இதுவரை நீட் தேர்வின் பாதிப்பு குறித்து 25 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அனைத்து தரப்பினர் அளிக்கும் கருத்துகளின் படி, இறுதி அறிக்கை செய்யப்படும் என கூறினார். தவிர நீட் தேர்வு நடத்த வேண்டாம் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.