3 லட்சத்துக்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – வணிக நிபுணர்கள் தகவல்!
நாட்டில் தீபாவளி முதல் கிறிஸ்துமஸ் வரையிலான பண்டிகை கால கட்டத்தில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வணிக நிபுணர்கள் தகவல் அளித்துள்ளனர்.
புதிய வேலைவாய்ப்பு:
நடப்பாண்டில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பாதி நாட்கள் ஊரடங்கில் கழிந்துள்ளது. இருப்பினும், இதுவரை இல்லாத அளவிற்கு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வேலைவாய்ப்பு சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பட்ட வேண்டிய வளர்ச்சி ஆகும். இந்திய பணியாளர் கூட்டமைப்புக்கு ஃபர்ஹான் ஆஸ்மி அளித்துள்ள தகவலின் படி, வர இருக்கும் தீபாவளி முதல் கிறிஸ்துமஸ் வரையிலான பண்டிகை காலங்களில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான வேலைகள் உருவாக்கப்படும்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, EMIS இணையதளத்தில் பதிவேற்றம் – சுற்றறிக்கை வெளியீடு!
இந்த புதிய வேலைவாய்ப்புகள் உணவு விநியோகம், உற்பத்தி, இ-காமர்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் உருவாக்கப்படும் என்றும் பணியமர்த்தல் 30 முதல் 35 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். தற்போது ராண்ட்ஸ்டாட் இந்தியாவின் பணியாளர் இயக்குநர் யெஷாப் கிரி அவர்கள் தனியார் இணையத்தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் பணியமர்த்தல் வேகம் எப்போதும் இல்லாத அளவுக்கு உயரும் என்றும் ,65,000 முதல் 80,000 புதிய தற்காலிக ஊழியர்கள் குறிப்பிட்ட துறைகளில் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
வாடிக்கையாளர் சேவை, விநியோகம் போன்ற துறைகளில் குறிப்பிட்ட நிறுவனங்கள் 12,000-15,000 புதிய தற்காலிக பணியாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக வணிக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மனிதவள ஆணையத்தின் மூத்த இயக்குநர் அலோக் குமார், ஈ-காமர்ஸ், தளவாடங்கள், நுகர்வோர் பொருட்கள் மற்றும் லைப்ஸ்டைல் தயாரிப்பு நிறுவனங்களில் வரும் காலாண்டில் 20 முதல் 25% அளவிற்கு புதிய வேலைவாய்ப்புகள் கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கும் அதிகமாக உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.