தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, EMIS இணையதளத்தில் பதிவேற்றம் – சுற்றறிக்கை வெளியீடு!
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளி மாணவர்களின் விவரங்களையும் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குநர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
EMIS பதிவேற்றம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மீண்டும் செப்டம்பர் 1ம் தேதி முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இகனையடுத்து பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்து வருகிறது. மேலும் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
சூப்பர் மாடல் மீரா மிதுன் ஜாமீன் மனு மீதான விசாரணை – ஆகஸ்ட் 23 க்கு ஒத்திவைப்பு!
இந்த நிலையில் ஆகஸ்ட் 1ம் தேதி நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை மாணவர்கள் விகித அடிப்படையில் கணக்கெடுத்து அதை எம்மிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் பொன்னையா தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது நடைமுறையில் உள்ளது.
TN Job “FB Group” Join Now
இதற்காக தொடக்க கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளி மாணவர்களின் விவரங்களை வகுப்பு வாரியாக மற்றும் அவர்கள் பயிலும் மொழி வாரியாகவும் EMIS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் இரு மொழி, மும்மொழி என சிறுபான்மை மொழி பள்ளிகள் EMIS இணையத்தில் தனியாக விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.