MOEF வன அமைச்சகத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!!
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தில் உள்ள Consultant / Research Associate பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது.இதில் இப்பணிகளுக்கென மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | MOEF |
பணியின் பெயர் | Consultant / Research Associate |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21 days |
விண்ணப்பிக்கும் முறை |
MOEF காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Consultant / Research Associate பணிகளுக்கு என மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
MOEF வயது வரம்பு:
- Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 40 ஆக இருக்க வேண்டும் .
- Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 35 ஆக இருக்க வேண்டும் .
MOEF கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் PhD/ Master Degree பெற்றிருக்க வேண்டும்.
Ujjivan வங்கியில் டிகிரி முடித்தவர்க்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!!
MOEF ஊதிய விவரம் :
இப்பணிகளுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.40,000/-முதல் அதிகபட்சம் ரூ.60,000/-வரை ஊதியம் வழங்கப்படும்.
MOEF தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist/ Online Written Exam/ Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
MOEF விண்ணப்பிக்கும் முறை;
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் விண்ணப்படிவத்தை இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.