உயரப்போகும் கட்டண விலை .. இனி பார்த்து தான் பேசணும் போல – தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திட்டம்!
நாட்டில் உள்ள அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் தற்போது மிகவும் குறைந்த விலையில் அதிக பலன்களை அளித்து வரும் நிலையில், இந்த நிலை மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கட்டண உயர்வு:
தொலைத்தொடர்பு துறையில் மொபைல் போன்களின் வரவு ஆரம்பித்த காலத்தில் 1 நிமிட கால் பேச விதிக்கப்பட்ட கட்டணம் அதிகமாக இருந்தது. மேலும், Incoming கால்களை பேசுவதற்கும் கட்டணம் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன்பிறகு சில காலம் கழித்து Unlimited கால்கள் பேசுவதற்கான சலுகைகள் அளிக்கப்பட்டது. இதைப்போலவே, தினசரி 100 இலவச SMS, மற்றும் OTT பலன்கள் போன்றவை அதிக அளவில் அளிக்கப்பட்டது.
தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட தகவல்!!
Exams Daily Mobile App Download
இதன் சிறப்பு என்னவென்றால் இவை அனைத்துமே மிகவும் சாதாரண விலையில் தான் மக்களுக்கு அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியான தகவலின் படி, நிறுவனங்களின் வருவாய் மற்றும் மார்ஜின்கள் மீதான அழுத்தம் அதிகரிப்பதால் தொலை தொடர்பு நிறுவனங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 10% கட்டணங்களை உயர்த்த உள்ளதாக ஜெஃப்ரிஸ் என்ற முதலீட்டு வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைப்போலவே, 2023, 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளின் இறுதியிலும் கட்டண உயர்வை அமல்ப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.