தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு முழு ஊரடங்கு – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை அரசு கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதனால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதா என்பதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வருகிறது. தினசரி 2000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அதே நேரம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்த உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் தோற்றும் வேகமெடுத்து வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்டோருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுளள்து. அதனால் தடுப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முக்கிய கோரிக்கை! முதல்வரின் முடிவு என்ன?
நேற்று மருத்துவ அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்துள்ளார். அதனை தொடர்ந்து கோயில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. திரையரங்கு மற்றும் உணவகங்களில் 50% பேர்க்கு மட்டுமே அனுமதி, தினசரி இரவு 10 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கட்டண விதிகளில் மாற்றம்!
தற்போது தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது என்றும் கூறியுள்ளார். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு கட்டாயம் அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதனால் பண்டிகை முடிந்து மீண்டும் ஊர் திரும்புவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.